2025 ஜூலை 21, திங்கட்கிழமை

குழு மோதல்: மறியல் நீடிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் இரு குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேரினதும் விளக்கமறியல், செம்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது,  விளக்கமறியலை நீடித்து, நீதவான் உத்தரவிட்டார்.

காத்தான்குடியில் கடந்த 10.3.2017 வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில், கத்திகுத்து மற்றும் கல் வீச்சு சம்பவங்களில் இரு குழுக்களில் இருந்தும் மூவர் காயமடைந்திருந்தனர்.

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரசாரக் கூட்டமொன்று, காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியில் அன்றைய தினம் மாலை இடம்பெறவிருந்த நிலையிலேயே, இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .