Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 07 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள சந்திவெளியில் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட பெறுமதிவாய்ந்த ஒரு தொகை வேப்ப மரக்குற்றிகளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இரவு கைப்பற்றியதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பீரீஸ் தெரிவித்தார்.
பொதுமக்களிடம் இருந்து புலனாய்வுப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
ஸ்தலத்துக்கு விரைந்து மறைந்திருந்த பொலிஸார், வாகனமொன்றில் மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட 6 அடி நீளம் கொண்ட 15 மரக்குற்றிகளையும் மரக்குற்றிகள் ஏற்றப்பட்ட பட்டா வாகனத்தையும் கைப்பற்றியதோடு, அதன் சாரதியையும் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த வாகன சாரதி என். மன்சூர் (வயது 38) என்பவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago