2025 மே 21, புதன்கிழமை

சர்வமத ஊர்வலம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சமாதான தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட சமாதான ஊர்வலம், மட்டக்களப்பில் நாளை மறுதினம்(30) இடம்பெறவுள்ளதாக, பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார்.

 

சமாதானத்தின் அவசியம் உணரப்பட்டுள்ள சமகாலத்தில் அதனை செயலுருப்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த சமாதான ஊர்வலத்தை ஏற்பாடு செய்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, திருமலை வீதி தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலய முன்றலில் இருந்து காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இவ்வூர்வலம், மட்டக்களப்பு காந்திப் பூங்காவைச் சென்றடைந்தவுடன் சமாதான ஆர்வலர்களால் சமாதானத்தை வலியுறுத்தும் சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளன.

இன, மத, பால், மொழி, வயது மற்றும் பிரதேச வேறுபாடுகளைக் கடந்த மேற்படி சமாதான ஊர்வலத்தில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தாம் பொதுவாகவும் கௌரவமாகவும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .