Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கிரான்புல்சேனை அணைக்கட்டு வேலைகள், சீன நாட்டு நிர்மாண நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுமாயின், இழுத்தடிப்புக்கள், மோசடிகள் இன்றி உயர்தரத்தில் அதன் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யக் கூடியதாக இருக்கும்” என, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்தில் பாரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடிய கிரான்புல்சேனை அணைக்கட்டு நிர்மாணிப்பதில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருவது சம்பந்தமாகக் கேட்டபோது, இன்று (25) அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அதிக நிதி ஒதுக்கீட்டில் பாரிய நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும்போது நாம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
“சுமார் 60 வருடங்களாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பெரும் விவசாயப் பரப்பான கிரான்புல்சேனை அணைக்கட்டு நிர்மாணம் தற்பொழுது கைகூடி வந்துள்ளது.
“இதனையிட்டு, பிரதேச விவசாயிகள் பெருத்த எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிவிடக் கூடாது என்பதால் அதன் நிர்மாணப் பணிகள் குறித்து நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
“அதனாலேயே நான் நிர்மாணிப் பணிகளுக்காக வெளிப்படைத்தன்மையில்லாத ஒப்பந்தங்கள் எதனையும் செய்யாது பகிரங்கமான் கேள்விப்பத்திரங்களைக் கோருவதன் மூலம் தகுதியான கட்டட நிருமாணங்களைச் செய்வோருக்கு அணைக்கட்டு நிர்மாணப்பணியை ஒப்படைக்க முடியும் என்று வலியுறுத்தி வருகின்றேன்.
“தற்போதைய அவதானிப்பில் மற்றவர்களை விட சீன நிர்மாண நிறுவனங்கள் துரித கதியிலும் அதேவேளை சிறப்பாகவும் தரமாகவும் நிர்மாணப்பணிகளை செவ்வனே செய்து முடிப்பார்கள் என்ற அபிப்பிராயம் நிலவுகிறது.
“எனவே, தவறான கொந்தராத்துக் காரர்களிடம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை கொடுத்து ஏமார்ந்து, மக்களையும் அதிருப்தியடையச் செய்வதை விட சிறப்பாகச் செய்யும் சீன நிறுவனங்களிடம் ஒப்படைத்து மக்களின் பெரிய எதிர்பார்ப்பை திருப்தியளிக்கச் செய்வது சிறந்தது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .