2025 மே 21, புதன்கிழமை

’சூழலை பாதுகாப்போம்’: ஊர்வலத்தில் வலியுறுத்தல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சூழலை பாதுகாப்போம்” என வலியுறுத்திய ஊர்வலமொன்று, காத்தான்குடியில் இன்று காலை இடம்பெற்றது.

சீறா அரமைப்பால் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள், சீறா அமைப்பின் பிரதி நிதிகள் கலந்துகொண்டனர்.

பொலித்தீன் பாவனையைத் தடை செய்யுமாறும் மரங்களை நட்டு சூழலை பாதுகாக்குமாறும், சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கையை செய்யாமலிருக்குமாறும் இதன்போது மாணவர்களால் வலியுறுத்தப்பட்டன.

காத்தான்குடி உமர் சரீப் பள்ளிவாயலுக்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம், காத்தான்குடி பிரதான வீதி மற்றும் கடற்கரை வீதி வழியாக சென்று அல் அமீன் பாடசாலையைச் சென்றடைந்தது.

இதன்போது மரங்களும் நாட்டப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .