Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோளப் பொத்திகளைக் கொண்டுசெல்லும் பாணியில், அதற்குள் மறைத்து, தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனத்தை, ஏறாவூர் பொலிஸார், இன்று (29) கைப்பற்றினர்.
இதன்போது, வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டனரென, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளின் ஜயசுந்தர தெரிவித்தார்.
மகாஓயா, தம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சாரதியான மஹிந்த தர்மசிறி அத்தநாயக்க (48 வயது), உதவியாளரான மொஹொட்டி முதியன்சேலாகே கிரிபண்டா (60 வயது) ஆகியோரே, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.
மகாஓயா - தம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கடந்த சில நாள்களாக சோளப் பொத்திகள் கொண்டுவரும் போர்வையில், மரக்கடத்தல் இடம்பெறுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து, போதை ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எம்.பி.ஜி.ஜி.எஸ். சத்துரங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், செங்கலடி பகுதியில் மறைந்திருந்து, இம்மரக்கடத்தலை முறியடித்துள்ளனர்.
வாகனத்தில் 13 தேக்குமரக்குற்றிகளை அடுக்கி சோளப் பொத்திகளையும் இலைகுழைகளையும் மேலிட்டு, நுட்பமாக மறைக்கப்பட்டிருந்ததென, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
14 May 2025
14 May 2025