Sudharshini / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலின்;டர் வெடித்ததில், குறித்த வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாக்கியுள்ளதென களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று திங்கட்கிழமை (01) மாலை, களுதாவளை வன்னியார் வீதியில் அமைந்துள்ள செல்லையா ஜீவரத்தினம் என்பவரின் வீட்டில் எரிவாயு சிலின்;டர் திடீரென வெடித்துள்ளது.
இதில் குறித்த வீட்டிலிருந்த அனைத்து பெறுமதிவாய்ந்த பொருட்களும் சேதமாகியுள்ளதென களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago