Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 11 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
'கடந்த காலத்தில் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைப் படிப்பினையாகக் கொண்டு, எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்' என, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்
லங்கா சதொசவின் 378ஆவது கிளை மட்டக்களப்பு, கொக்கொட்டிச்சோலையில், சனிக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்று பேசுகின்றார்கள். ஆனால், தேர்தல் நோக்கங்களுக்காக, தங்களுடைய சுய நலன்களுக்காக அவர்களுடைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது, ஒற்றுமையை நாங்கள் காணவில்லை.
'இருந்தபோதிலும், தமிழர்களும் முஸ்லிம்களும், தங்களுக்குள்ளே பிளவுகளை உருவாக்கிக்கொண்டு இருக்கக் கூடாது. இவ்வாறு தொடரும் பட்சத்தில், இரண்டு சமூகங்களுக்கு இடையிலான உறவு, ஒருபோதும் தழைத்தோங்கப் போவதில்லை' என்றார்.
'நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக, நாங்கள் பொருளாதாரத்தை இழந்தும் உறவுகளைப் பறிகொடுத்தும் உள்ளோம். அத்துடன், அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைமையும் எங்களுக்கு உருவாகியுள்ளது.
"காணாமல் போனோரின் உறவினர்கள், காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் எனக் கூறி, வீதிகளில் தவம் இருக்கின்றனர்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago