Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன், கே.எல்.ரி. யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்
“நாட்டில் தற்போது இருக்கின்ற பிரச்சினைகள் காரணமாகவும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் காரணமாகவும் ஆட்சி மாற்றமொன்று வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்” என்று, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் அமைப்பாளரான ஏ.எல்.எம்.உவைஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மேற்கு, காத்தான்குடி நகர சபை ஆகியவற்றுக்கான வேட்புமனுக்களை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தாக்கல் செய்தது.
இந்த வேட்புமனுத்தாக்கலையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கிழக்கு மாகாணமான மட்டக்களப்புக்கு நான் வருகிற வேளை மூன்று வாரங்களுக்கு முன்னர் வரும் போது இருந்தமைக்கும் இப்போது இருப்பதற்கும் மிகவும் வித்தியாசம் இருக்கின்றது.
“காரணம், மக்கள் ஆட்சி மாற்றறம் வரவேண்டும் என்பதிலும், மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்பதிலும் உன்னிப்பாக இருக்கின்றார்கள்.
“அதில் விசேடமாக, சிறுபான்மையான தமிழ், முஸ்லிம் மக்கள், அன்றைக்கு அந்த ஆட்சியை வேண்டாம் என்று சொன்னவர்கள், இன்று வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
“எங்களுக்கு வேட்பாளர்கள் கூட எடுக்க முடியாது என்று சொன்னார்கள். இன்று மட்டக்களப்பில் வேட்புமனுக்கேட்டு நிறையப்பேர் வருகின்றார்கள். இது வரப்போகிற மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கும் வெற்றிக்கும் பெரியதொரு ஊன்றுகோலாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago