2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நாளை முதல் வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் நாளை முதல் (20) எதிர் வரும் 30ஆம் திகதிவரை பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பேக்கரி, சாப்பாட்டு கடை தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும்  மூடத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது  என மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

நேற்று  (18) நடைபெற்ற  வர்த்தக சங்கக்  கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்றுப்  பரவலைக் கட்டுப் படுத்தும் முகமாகவும், இம் மாவட்டத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டும்  இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனைத்து வர்த்தகர்களும் பூரண ஒத்துழைப்பைத்  தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இக் கூட்டத்தில் வர்த்தக சங்கத்தின் செயலாளர் தியாகராசா உட்பட அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X