Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்;சேனைக் கிராமத்தில் 06 கிலோகிராம் பன்றி இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவரை சனிக்கிழமை (06) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காட்டு விலங்குகள் வேட்டையாடப்பட்டு, அவற்றின்; இறைச்சி விற்பனைக்கு கொண்டுசெல்லப்படுவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து குறித்த கிராமத்துக்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டதாகவும் இதன்போது, பெண்ணொருவரிடம் பன்றி இறைச்சி தெரியவந்தது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நாளை திங்கட்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தொப்பிகல (குடும்பிமலை) மலைப்பகுதிக் காடுகளில் மிருகங்கள் வேட்டையாடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago