2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் டெங்கு காய்ச்சலில் மரணம்

Princiya Dixci   / 2021 மார்ச் 08 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், காதியார் வீதியை அண்டி வசிக்கும் பஜிர் நாதிர் எனும் மாணவன் டெங்குக் காய்ச்சலால் மரணித்துள்ளார். 

பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முதல் நாள் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்று (07) இரவு இம்மாணவன் மரணித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .