Janu / 2024 ஏப்ரல் 02 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியில், சுற்றுலாப்பிரயாணிகளை ஏற்றும் கெப் ரக வாகனமொன்று வேககட்டுப்பாட்டை இழந்து வீதியருயிலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் செவ்வாய்கிழமை (02) இடம்பெற்றுள்ளது .
இதன்போது குறித்த வாகனத்தின் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் காயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும்
சாரதியின் நித்திரை கண்கலக்கமே இவ் விபத்திற்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இதனால் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 4 மின்கம்பங்கள் உடைந்து முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், உரிய கெப் ரக வாகனமும் பாரிய சேதத்திற்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது .
மேலும் இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
வ.சக்தி


8 minute ago
16 minute ago
32 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
32 minute ago
35 minute ago