2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பெருமளவு போதைப்பொருள்களுடன் மட்டக்களப்பில் மூவர் கைது

Editorial   / 2019 மார்ச் 10 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

 

மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில், நேற்று (09) மாலை மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள், கசிப்பு உற்பத்தி நிலையங்களில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் போதையொழிப்புச் செயற்றிட்டத்துக்கமைய, 39ஆம் கொலணி, பக்கியல்ல, மகழூர்  ஆகிய இடங்களில்  இத்தேடுதல் நடத்தப்பட்டதாக, மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி ரி.தயாளேஸ்வரகுமார் தெரிவித்தார்.

இதன்போது 50,000மில்லிலீற்றர் கோடா, 600 மில்லிலீறற்றர் கசிப்பு உட்பட கசிப்பு உற்பத்தி செய்யப் பயனபடுத்தும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X