2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பிரசாந்தனின் பிணை மனு வழக்கு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு   மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தனுக்கு பிணை கோரிய மனுத் தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

சந்தேக நபரான பூ.பிரசாந்தனுக்கு பிணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை அவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் 29ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி ஒத்திவைத்தார்.

2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி மட்டக்களப்பு, ஆரையம்பதிப் பிரதேசத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் அரசாங்கப் பாடசாலை ஒன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் மற்றும் பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரனும் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X