2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏழு வயதுச் சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில்; 18 வயதுடைய சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த இச்சிறுவனை வழிமறித்து காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பெற்றோரிடம் குறித்த சிறுவன் தெரியப்படுத்தியதை அடுத்து, பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இதனை அடுத்து, விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதுடன், குறித்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனுக்கு 25 ரூபாய் பணமும் பிஸ்கட் பக்கெட்டும்  வழங்கி சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X