2025 ஜூன் 14, சனிக்கிழமை

மக்களின் தேவை கருதி விரைவில் உப தபால் நிலையம்

Niroshini   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

மட்டக்களப்பு - தும்பங்கேணி - தாந்தாமலை கிராமத்தில் மக்களின் நன்மை கருதி விரைவில் உப தபால் காரியாலயம் திறக்கப்பட இருப்பதாக பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான சோ.கணேசமூர்த்தி, இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

பிரதேச மக்கள் தங்களின் தேவைகளை தபால் நிலையத்தின் ஊடாக பெறுவதற்கு வேறு பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில், அப்பிரதேச மக்களின் நன்மை கருதி நேற்று வெள்ளிக்கிழமை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களின் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இப்பிரதேசத்தில் புதிய தபால் காரியலயம் ஒன்றினை திறப்பதற்கு உத்தரவழித்ததாகவும் இது சம்மந்தமாக தபால்மா அதிபரிடம் உரிய அபாணங்களை சமர்ப்பிற்குமாறு வேண்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .