2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 30 கிராமியப் பாலங்கள்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 20 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்

கிராமியப் பாலங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ், இதுவரையில் மட்டக்களப்பில் 5 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், இன்னும் 25 பாலங்கள்  அமைக்கப்பட வேண்டியுள்ளன எனக் கூறினார்.

மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கிராமியப் பாலம் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டம், அப்பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது.
மட்டக்களப்பில் இவ்வாண்டு 30 பாலங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் ஒரு பாலம் அமைக்கப்படவுள்ளதுடன், இப்பாலம் மாவடிமுன்மாரியில் அமைக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X