Niroshini / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
நல்லிணக்க பொறிமுறை பற்றிய மக்கள் கருத்தறியும் செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட குழுவின் செயலாளர் ஏ.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், காணாமல் போன, கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் பொதுநிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பெண் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்ததுடன், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
இந்த செயலணியின் அமர்வு மட்டக்களப்ப மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலக மண்டபத்திலும் வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மண்டபத்திலும் நடைபெற்றது.
வாழைச்சேனையிலும் களுவாஞ்சிகுடியிலும் 441 பேர் தமது கருத்துக்களை ஆலோசனைகளை இந்த செயலணியில் முன்வைத்ததாக செயலணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.


1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago