Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜூலை 09 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சிவனேஸ்வரன் றெஜினாவுக்கு நீதி வழங்குமாறு கோரி, மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால், ஆர்ப்பாட்டமொன்று இன்று (09) மேற்கொள்ளப்பட்டது.
வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி இந்திரன் ஜெயசிலி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து பெண்கள் கலந்துகொண்டனர்.
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்; தொடர்ச்சியாக சிறுவர்களும் பெண்களும் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படல் வேண்டும்; இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வலிறுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025