2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வவுணதீவில் ஆயுதங்கள் மீட்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 04 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பொலிஸ் பிரிவிலுள்ள வயல்வெளியிலிருந்து ஆயுதங்கள் சில நேற்று வியாழக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவுப் பொலிஸ் பிரிவிலுள்ள பன்சோலை பிரசேத்தில் வயல்வெளியில் ஒன்றில் உழவிக் கொண்டிருந்தபோது இந்த ஆயுதங்கள் கிடப்பதைக் கண்ட வயலை உழவிக் கொண்டிருந்த நபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுணதீவுப் பொலிஸார் அங்கு கிடந்த ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர்.

81 ரக மோட்டார் குண்டுகள் இரண்டு மற்றும் வாகனங்களை அழிக்கும் குண்டு ஆகியவையே மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவுப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X