2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 18 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி,களுவாஞ்சிகுடி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதேச சபைக்கு முன்பாக வான் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

இவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்தவர் களுதாவளை பகுதியை சேர்ந்த யோ.லவன்(28 வயது)என்பவர் என  பொலிஸார் தெரிவித்தனர்.

இதேபோன்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டையில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இடம்பெற்ற இந்த விபத்தில் பாலையடிவட்டையை சேர்ந்த சா.உதயகுமார் (32வயது)என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X