2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் சாரதிகள் இருவர் படுகாயம்

Kogilavani   / 2017 ஜூன் 09 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, கல்முனை பிராதான வீதி  புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் சாரதிகள் இருவர், கால்கள் முறிந்த நிலையில் நிலையில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி எம்.துசார தெரிவித்தார்.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த லொறி, மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற டிமோ பட்டா வாகனத்துடன் நேருக்கு நோர் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில், கொழும்பைச் சோந்த எம்.வீரகொட மற்றும் கல்முனையைச் சேர்ந்த சுலைமாலெப்பை ஜப்பார் ஆகியோரே  படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமிதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X