Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 மார்ச் 21 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், தாயும் மகளும், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு, படுகாயங்களுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
55 வயதுடைய தாயும் பல்கலைக்கழக மாணவியான 20 வயது மகளுமே, இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது வீட்டுக்குள், நேற்று (20) இரவு புகுந்த மூவர் கொண்ட கும்பல், தாயையும் மகளையும் கட்டிவைத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago