Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீடமைப்பு அமைச்சராக சஜித் பிரேமதாச இருந்தபோது, மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் நினைவுக்கல், இனந்தெரியாதவர்களால் இன்று (09) அதிகாலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதென, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, கொக்குவில் பிரதேசத்தில், இவ்வாண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று “செமட்ட செவன” திட்டத்தின் கீழ் சுபீட்சம் நகர், விழுது நகர் ஆகிய இரண்டு கிராமங்களில் 45 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு, அப்போதைய அமைச்சர் சஜித் சஜித் பிரேமதாசவால் திறந்துவைக்கப்பட்டது.
இதன்போது, நினைவுக்கல் ஒன்றும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இந்த நினைவுக்கல்லே உடைத்துச் சேதப்பட்டுள்ளதென, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago