Mithuna / 2024 ஜனவரி 14 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
மட்டக்களப்பு - கிரான் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நலன்கருதி மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணனின் ஆலோசனையில் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி சிவலக்சன் தலைமையின் கிரான் மற்றும் சந்திவெளி பொதுச் சுகாதார பரிசோதகர் நௌஸாத்தின் வழிகாட்டலில் சுமார் 67 குடும்பங்களுக்கு குடிநீர் பாதுகாப்பு, உணவுப்பாதுகாப்பு , சுகாதாரமான முறையில் கழிவகற்றல்,தொற்றுநோய் கட்டுப்பாடு போன்ற விழிப்பூட்டல்கள் செய்யப்பட்டுள்ளன

அத்துடன், முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு செங்கலடி வைத்தியசாலையின் பொருப்பு வைத்திய அதிகாரி பரமானந்த ராஜாவினால் நோய்வாய்ப்பட்ட நோயாளர்களுக்கு மருந்துவ உதவிகள் வழங்கப்பட்டதுடன், வைத்திய அதிகாரி சிவலக்சன் நுளம்பு வலைகளையும் வழங்கி வைத்துள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago