2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஐவர் காயம்

Thipaan   / 2016 மார்ச் 12 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

குருநாகல் கொக்கறல்லயில் இன்று அதிகாலை(12) இடம் பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காத்தான்குடியிலிருந்து 10 பேரை ஏற்றிக் கொண்டு நேற்றிரவு(11) கொழும்பு நோக்கிச் சென்ற  வேன் ஒன்று இன்று சனிக்கிழமை அதிகாலை குருநாகல் கொக்கறல்ல எனுமிடத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வேன், கம்பமொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த வேனில் பயணித்த காத்தான்குடியைச் சேர்ந்த சாகுல் ஹமீட் பசீர்(56) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், காத்தான்குடியைச் சேர்ந்த மேலும் ஐந்து பேர் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X