2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விழிப்புணர்வு பேரணி

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

“வாசிப்பின் ஊடாக நவீன சமூகத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப் பொருளில் காத்தான்குடியில் இன்றுத் திங்கட்கிழமை காலை விழிப்புணர்வு பேரணியொன்று நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, காத்தான்குடி நகர சபை முன்றலில் ஆரம்பமாகி காத்தான்குடி பிரதான வீதி வழியாக சென்று மீண்டும் காத்தான்குடி நகர சபையை சென்றடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகர சபை செயலாளர் எம்.ஐ.ஸாபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X