Suganthini Ratnam / 2016 ஜூலை 19 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி 06ஆம் குறிச்சியில்; கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் நேற்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தலைமையிலான குழுவினர், குறித்த பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, இச்சந்தேக நபர் 5,000 மில்லிகிராம் கொண்ட கஞ்சாக் கட்டு வைத்திருந்தமை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இச்சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாக் கட்டுடன் சந்தேக நபரை காத்தான்குடி பொலிஸாரிடம் தாம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago