Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 13 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடந்த அரசாங்கத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் பெருந்தொகையான நிதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது என நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் அமைச்சின் இணைப்பாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் சமாதான கிராமத்துக்கு குடிநீர் வழங்குவதற்காக குழாய்களை பதிக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முழு நாட்டுக்கும் நீர்வழங்கும் நிதி மற்றும் கழிவு முகாமைத்துவமும் செய்யக்கூடியளவு நிதி கடந்த அரசாங்கத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் செலவு செய்யப்பட்டுள்ளதாக இந்த அமைச்சினை பொறுப்பெடுத்து இரண்டு வாரங்களில் இதற்குப் பொறுப்பான அமைச்சர்; எம்மிடம் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த அமைச்சினை பொறுப்பேற்றதையடுத்து இந்த அமைச்சினால் மேற்கொள்ளப்படவிருந்த பாரிய திட்டங்களை மீளாய்வு செய்து அந்த நிதியில் அரசாங்கத்திற்கு மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளார். அதேபோன்று ஊழல் மோசடிகளையும் தடுத்து நிறுத்தினார்.
அமைச்சரின் நடவடிக்கையினால் காத்தான்குடியில் கழிவு முகாமைத்துவ திட்டமொன்று பாரிய நிதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய நீர்வழங்கல் வடிகாமைப்புச் சபையினால் குடி நீர் வசதியற்ற இடங்களுக்கு இந்த குழாய்களை பதிப்பதற்கான நடவடிக்கையினை மேற் கொண்டுவருகின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago