Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களுக்கான திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட உன்னிச்சை மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9.30 மணிக்கு அப்பிரதேச செயலகத்தில் நடைபெறும்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம், கித்துள்வெள, வெலிக்காக்கண்டி மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு அப்பிரதேச செயலகத்தில் நடைபெறும்.
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட நவகிரி, தும்பங்கேணி மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், எதிர்வரும் 29ஆம் திகதி காலை 9.30 மணிக்கு அப்பிரதேச செயலகத்தில் நடைபெறும்.
மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கடுக்காமுனை, புழுக்குணாவை, அடைச்சகல், சிறிய
நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில்; நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண தொழில்நுட்ப செயற்பாட்டுக் குழுக் கூட்டம், மாகாண சபை அமர்வு, நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளதால், மேற்படி கூட்டங்களுக்கான திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
7 minute ago
8 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
28 minute ago
3 hours ago