Suganthini Ratnam / 2016 நவம்பர் 06 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 440 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட காணி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா தெரிவித்தார்.
கடந்த யுத்த காலத்தின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சுறுத்தல் காரணமாகச் சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் மற்றும்; குறைந்த விலைக்கு காணிகளை விற்பனை செய்தவர்கள் தங்களின் காணிகளை மீளப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை வழங்கும் நடவடிக்கை, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது, சொந்தக்காணிகளை கைவிட்ட மற்றும்; குறைந்த விலைக்கு காணிகளை விற்பனை செய்த சுமார் 700 பேர் பங்குபற்றினர்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,'1,446 சதுர கிலோமீற்றரைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசாரத்துக்கு ஏற்ப முஸ்லிம்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும்.
இம்மாவட்டத்தில் 30 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்றால், அவர்களுக்கு 440 சதுர கிலோமீற்றர் பரப்பளவான காணி வழங்கப்பட வேண்டும்' என்றார்.
'தற்போது இம்மாவட்டத்தில் 36 சதுர கிலோமீற்றர் அளவான காணிகளிலேயே முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இதைக் கவனத்திற்கொண்டு அரசாங்கம் முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டும்.
மக்களின் காணி அபகரிப்பு அநியாயமாக இடம்பெற்றுள்ளதுடன், வாழ்வாதாரத்துக்கு காணி மிக முக்கியமானதாகும்.
இந்த நாட்டில் 1985ஆம் ஆண்டு இன வன்முறை அதிகரித்தபோது, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டனர். சிலர் இடம்பெயர்ந்தனர். அவர்களில் பலர் தற்போது காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அச்சுறுத்தல் காரணமாக தங்களின் காணிகளைக் கைவிட்டவர்கள் மற்றும் குறைந்த விலைக்கு காணிகளை விற்றவர்கள் சொந்தக் காணிகளை மீளப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காணிகளை பெறுவதற்காக நாடாளுமன்றத்திலும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எந்தப் பாராபட்சமும் இன்றி காணிகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் வழி செய்யும் என்று நம்புகின்றோம்' எனவும் அவர் கூறினார்.

5 minute ago
7 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
15 minute ago