2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காணாமல் போன 1,836 பேரின் விண்ணப்பங்கள் கிடைத்தன

Suganthini Ratnam   / 2014 ஜூலை 11 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காணாமல் போன 1,836 பேரின் விண்ணப்பங்கள் 28.12.2013 இலிருந்து 06.06.2014 வரையான காலப்பகுதியில்  யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவுகளின் ஒன்றியத்துக்கு கிடைத்துள்ளதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் வி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த கால யுத்த அனர்த்தங்களினால் 1,836 பேர் காணாமல் போனதாக தமது ஒன்றியத்துக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பிலுள்ள தமது அலுவலகத்துக்கு தினமும் காணாமல் போனோரின் விண்ணப்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றையும் ஒன்றுசேர்த்து காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்  கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X