2025 மே 05, திங்கட்கிழமை

உணவு ஒவ்வாமையால் 24 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.ரவிந்திரன்


உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனமடைந்த  24 பேர் இன்று திங்கட்கிழமை கல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாறு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண வீடு ஒன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவரில் 20 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக  சுகவீனமடைந்துள்ளனர்.

வயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்லாறு மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி, டாக்டர் எம்.ருதேசன் தெரிவித்தார்.

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ள இவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் இவர்களுக்கான அவசர சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X