2025 மே 05, திங்கட்கிழமை

100க்கும் மேற்பட்டோர் அபராதமின்றி விடுதலை

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொலிஸாரினால் குற்றஞ்சாட்டப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் எவ்வித அபராதமுமின்றி இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிக்காத பெண்கள் என்று பொலிஸாரினால் குற்றஞ்சாட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை இன்று ஆஜர்படுத்தும்படி நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் இன்று புதன்கிழமை ஆஜரான மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் எந்தவித அபராதமுமின்றி விடுதலை செய்தார்.

நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியமையால் நீதிமன்றம் மக்களால் நிரம்பி காணப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X