2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

கிரான் பிரதேசத்தில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை பொலிஸாரால் நடமாடும் சேவையொன்று நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்டது.

வாழைச்சேனை பிரதம பொலிஸ் பரிசோதகர் சி.ஐ.ஜெயவீர தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் கிரான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், வைத்தியர்கள் கலந்து கொண்டு மக்களுக்கான சேவையை வழங்கினர்.

காலம் கடந்த இறப்பு, பிறப்பு பதிவு தொடர்பான பொலிஸ் முறைப்பாட்டு பதிவுகள், இலவச வைத்திய சேவை, தொலைந்துபோன அடையாள அட்டைக்கான பொலிஸ் முறைப்பாட்டு பதிவுகள் வழங்கல் போன்றன இந்த நடமாடும் சேவையில் மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .