2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

தேவையுடையவர்களை இனம் கண்டு உதவுவதே எமது நோக்கம்: அமெரிக்க தூதுவர்

Super User   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

தேவையுடையவர்களை இனம் கண்டு உதவுவதே அமெரிக்காவின் நோக்கமாகும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் தெரிவித்தார்.

இதன் அடிப்படையிலேயே இலங்கையில் தேவையுடையவர்களை இனங்கண்டு ஐக்கிய அமெரிக்காவின் உதவித்திட்டங்கள் ஊடாக கொழும்பிலுள்ள அமெரிக்கா தூதுவராலயம் மற்றும் யூ.எஸ்.எயிட் ஆகிய உதவுகின்றன என அவர் குறிப்பிட்டார்.

இதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அமெரிக்கா உதவி வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மக்களையும் அமெரிக்க மக்களையும் இணைக்கின்ற உறவு பாலமாக இரண்டு நாடுகளின் தேசிய கொடிகள் உள்ளமை குறிப்பிடத்தது என தூதுவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம் பிரதேசத்தில் இன்று காலை சப்பாத்து தொழிற்சாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமெரிக்க தூதுவா மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"இந்த கிரான்குளம் கிராமம் கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த தொழிற்சாலை இங்கு அமையப் பெறுவதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். இந்தப் பிரதேசங்களில் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கான தேவைகள் அதிகம் உள்ளன.

அத்துடன் இங்கு உற்பத்தி செய்யப்படும் பாதணிகள் மிகவும் அழகானவையாக உள்ளன. இந்த தொழிற்சாலை மூலம் சிறந்த உற்பத்தியை ஏற்படுத்தி இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என நான் நினைக்கின்றேன்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .