2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடியிலுள்ள ஷுஹதா வீதியைச் சேர்ந்த முஸ்த்தபா மஹ்றூப் (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி, மாவடிவேம்பு பகுதியில் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற விபத்திலேயே இவர் படுகாயமடைந்தார். 
இந்நிலையில், இவர்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடியிலிருந்து வெலிக்கந்த பிரதேசத்திற்கு ஆடு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் இவர் தனது மகனுடன் சென்றுகொண்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றது. இவரது  மோட்டார் சைக்கிள் மின்கம்பமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.
இவ்விபத்தில் தந்தையும் மகனும் காயமடைந்தனர்.

இவ்விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X