2025 மே 05, திங்கட்கிழமை

தமிழ் மக்களின் உரிமைகளை அரசாங்கம் வழங்கிக்கொண்டே உள்ளது: முரளிதரன்

Super User   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தமிழ் மக்களுக்குரிய உரிமைகளையும் சுதந்திரங்களையும் அரசாங்கம் வழங்கிக்கொண்டே உள்ளது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தேர்தல் மூலம் தங்களை ஆளும் உரிமையையும் அரசாங்கம் வழங்கிகொண்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வட மாகாணத்தில் தேர்தலை அரசாங்கம் நடத்தமாட்டார்கள் என்று கூறிவந்த நிலையில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தேர்தல் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார் என அவர் தெரிவித்தார். களுவாஞ்சிகுடியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அ

தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய கல்லாறு கிராமத்தின் உதயபுரம் பிரதேசத்தில் இன்று மின் விநியோகம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பிரதியமைச்சரின் நிதியொதுக்கீட்டின் கீழ் சுமார் 25 இலட்சம் ரூபா செலவில் மூன்று பகுதிகளுக்கான மின் விநியோக நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X