2025 மே 05, திங்கட்கிழமை

முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்,எஸ்.எம்.எம்.முர்ஷித்


சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு எடுத்துவரப்பட்ட ஒருதொகுதி பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ள பொலிஸார்,  சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓமடியாமடு வனப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த முதிரை மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு உழவு இயந்திரங்களில் இந்த முதிரை மரக்குற்றிகளை ஏற்றிவந்தபோதே கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த உழவு இயந்திரத்தின் சாரதி ஒருவரையே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  ஏனையோர்  தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள், முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேக நபரை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். (படங்கள்: எஸ்.எம்.எம்.முர்ஷித்)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X