2025 மே 05, திங்கட்கிழமை

காத்தான்குடியில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையின்போது புதிய தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களும்  காணாமல் போன அல்லது பழுதடைந்த  தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

காணாமல் போன தேசிய அடையாள அட்டைகளுக்காக அந்த இடத்திலேயே பொலிஸ் முறைப்பாடுகள் பெறப்பட்டதுடன்,  பொலிஸ் முறைப்பாட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதன்போது பிறப்புப் பதிவுகளும்  உடனுக்குடன் வழங்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எம்.அகமட் அப்கர், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.சுந்தரராஜன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கோமலேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மக்களுக்கான சேவையை வழங்கினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X