2025 மே 05, திங்கட்கிழமை

கற்பாறைகளால் மறைக்கப்பட்டிருந்த சிறுவனின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஓட்டமாவடி, மடுவத்து வீதியிலிருந்து சுமார் 11 வயது மதிக்கத்தக்க சிறுவனொருவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சடலம் இன்று மாலை 4 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டு கற்களால் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மேற்படி சடலத்தை, அப்பகுதிக்கு மாடு மேய்ப்பதற்காகச் சென்ற ஒருவர் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதுவரையில் சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X