2025 மே 05, திங்கட்கிழமை

நல்லூர் உற்சவத்திற்காக விசேட பஸ் சேவை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலை முகாமையாளர் துரை  மனோகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்திற்குச் செல்லும் பக்தர்களின் நலன் கருதியே இந்த விசேட  பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து தினமும் அதிகாலை 4.30 மணிக்கும்  மாலை 4 மணிக்கும் இந்த விசேட பஸ் சேவைகள் இடம்பெறும்

இந்த நிலையில், மட்டக்களப்பு மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து முதலாவது விசேட பஸ் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனைவிட தினமும் காலை 6.30 மணிக்கும் முற்பகல் 11 மணிக்கும் மாலை 5.45 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இரவு 7.15 மணிக்கும் தமது வழமையான பஸ் சேவைகள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் செல்லுமெனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X