2025 மே 05, திங்கட்கிழமை

சுயதொழிலை மேம்படுத்துவதற்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  விதவைகள் மற்றும் பொதுமக்களின் சுயதொழிலை மேம்படுத்துவதற்கான ஒருநாள் செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  விதவைகள் மற்றும் பொதுமக்களின் சுயதொழிலை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை  புனர்வாழ்வு புனரமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டு வருகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள 212 குடும்பங்களுக்கு கடன் உதவிகள்; வழங்கப்படவுள்ளன.
இந்த நிலையிலேயே மேற்படி பயனாளிகளுக்கான ஒருநாள்  செயலமர்வு மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு,  காத்தான்குடி, ஏறாவூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தச் செயலமர்வு நடத்தப்பட்டது

இந்தச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணி;ப்பாளர் இரா.நெடுஞ்செழியன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜி.சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X