2025 மே 05, திங்கட்கிழமை

சிங்கள மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட சிங்கள மொழிப்பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

'தேசத்திற்கு மகுடம்' திட்டத்தில் அரச மொழிக் கொள்கை அமுலாக்கல் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. 

தொடர்ந்து 2 வாரங்களாக 108 மணித்தியாலங்கள் நடத்தப்பட்ட இந்த பயிற்சிநெறியில் வாழைச்சேனை பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், கல்குடா கல்வி வலயம், கோறளைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 60 அரசாங்க ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) கணேசமூர்த்தி கோபிநாத், வாழைச்சேனை பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X