2025 மே 05, திங்கட்கிழமை

வாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 03 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

சவூதி அரேபியா, ஜித்தாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இளம் பெண்ணொருவரின் மரணம் குறித்து அவரது   உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.

தனது மகளுடைய மர்ம மரணம் தொடப்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையினைக் கண்டறிய வேண்டுமென மரணமான பெண்ணின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலிலுள்ள ஓமடியாமடுவைச் சேர்ந்த யோகேஸ்வரன் சாந்தி (வயது 24) என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு 31.08.2013 அன்று தகவல் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் சடலம் கொண்டுவரப்பட்டு 01.09.2013 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவர் கடந்த 4 வருடங்களாக சவூதி அரேபிய நாட்டில் ஜித்தா நகரின் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
 
இவரது தந்தை சீனித்தம்பி யோகேஸ்வரன் வயது (59) தெரிவிக்கையில்,

தனது மகள் சாந்தி 2009.10.10 இல் பணிப்பெண்ணாக சவூதி அரேபியா சென்றார். அங்கு சென்று இரண்டு தடவைகள் மட்டுமே தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார் அதன் பின்பு எதுவித தொடர்பும் அவரிடமிருந்து கிடைக்கவில்லை.

எனது மகளைப் பற்றிய தகவல் அறிய பல்வேறு இடங்களிலும் முகவர்களின் முலமாகவும் தொடர்பு கொண்டேன். பலன்  எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் மகளின் சடலத்தையே காணமுடிகிறது என்றார்.

மகள் எங்களுக்கு எதுவிதமான பணமும் அனுப்பவும் இல்லை. எனது மகளை கொடுமைப்படுத்தி கொன்றிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சடலத்தை என்னிடம் தரும்போது உமது மகள் நஞ்சருந்தி இறந்துள்ளதாகவே சவூதி தகவல்கள் தெரிவிக்கின்றன என்று என்னிடம் கூறினர்.
ஆனால், சடலத்தில் அடி காயங்கள் காணப்படுகின்றன. எனது மகளை கொடுமைப்படுத்தியே கொன்றிருக்கவேண்டும்.எனது மகளின் மரணம் இயற்கையானது அல்ல அவளது கொலைக்கு நீதி கிடைக்கவேண்டும்.

இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடாத்துமாறு சவூதியிலுள்ள இலங்கை தூதரகத்தை அரசாங்கம் பணிக்கவேண்டும். வறுமை காரணமாகவே மகள் எனது அனுமதியின்றி மத்திய கிழக்கு நாட்டிற்க்கு சென்றிருந்தார் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X