2025 மே 03, சனிக்கிழமை

திண்மக்கழிவு அகற்றல் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் திண்மக்கழிவு அகற்றல் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உறுப்பினர்களுக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஸ்ஸஹீத் அகமது லெவ்வை மண்டபத்தில் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரி.எம்.ஹாலித் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது யுனப்ஸ் நிறுவனத்தின் அதிகாரி எஸ்.கிருபாகரன் திண்மக்கழிவு அகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் விளக்கமளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் காத்தான்குடி நகரசபையின் பங்களிப்புடனும் யுனப்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் திண்மக்கழிவு அகற்றல் முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகள் காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி நகரசபை மேற்கொண்டுவரும் திண்;மக்கழிவு  அகற்றல் முகாமைத்துவ செயற்றிட்டத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடையும் நிலையிலுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X