2025 மே 03, சனிக்கிழமை

உயர் கல்வி அமைச்சர் மட்டு. விஜயம்

Super User   / 2013 ஒக்டோபர் 28 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்


உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்ககழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான கற்பித்தலிற்கான நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கட்டிடத்திற்கு உயர் கல்வி அமைச்சினால் 299 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பலக்லைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டாக்டர் கே.சுந்தரேசன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X