2025 மே 02, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கிய இருவர் காப்பாற்றப்பட்டனர்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 11 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு, பாசிக்குடாக் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த இருவரை கல்குடா பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

மாவடிச்சேனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை இவர்கள் இருவரும்  பாசிக்குடாக் கடலில் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில் 15 வயதுச் சிறுவன் ஒருவனை கடல் அலை அடித்துச்செல்லவே, அந்தச் சிறுவனை காப்பாற்றுவதற்கு  மற்றைய நபர் முயற்சித்துள்ளார்.

இதன்போதே இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்தபோது அபாயக் குரல் எழுப்பியுள்ளனர்.  அபாயக் குரலைக் கேட்டு பாசிக்குடா கடற்கரையில் நின்றிருந்த பொலிஸார் உடனடியாகச் சென்று இவர்கள் இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.

இவர்கள் இருவரும் தற்போது வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு;ள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X