2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஸ்ரீ நாககன்னி ஆலயத்தில் திருட்டு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி முதலாம் பிரிவு விநாயகர்புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாககன்னி ஆலயம் உடைக்கப்பட்டு ஆலயத்தின் உண்டியலில் இருந்த பணம் மற்றும் பெரிய குத்துவிளக்குகள் உட்பட ஆலயத்தின் ஏனைய பொருட்களும் களவாடப் பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இந்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அலய நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்தனர்.
 
நேற்றுமுன்தினம் (26) இரவு இவ்வாறு ஆலையத்தினை உடைத்து கொள்ளையிடப்பட்ட துணிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
ஆலயத்தின் கூரையின் மீதேறி கூரையினைப் பிரித்து ஆலயத்தினுள் இறங்கி இவ்வாறு உண்டியல் மற்றும் குத்துவிளக்குகள் உட்பட ஏனைய பொருட்களும் களவாடப்பட்டுள்ளன. உண்டியலில் இருந்த பணம் அனைத்தினையும் எடுத்துவிட்டு திருடர்கள் வெற்று உண்டியலை ஆலயத்தின் அருகிலிருந்த நீரேடையில் எறிந்து சென்றுள்ளனர்.
 
நேற்று வெள்ளிக்கிழமை பகல் பூசைக்காகச் சென்றபோதே இச்சம்பவம் தெரியவந்ததாகவும் இவ்விடயம் தொர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆலயத்தின் நிர்வாகம் மேலும் தெரிவித்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .